JUST IN | வீடியோவால் சலசலப்பு - Delete செய்த திருமா
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த திருமாவளவன். வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வீடியோ நீக்கப்பட்டது
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த திருமாவளவன். வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வீடியோ நீக்கப்பட்டது
''ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு. கடைசி மக்களுக்கு ஜனநாயகம். எளிய மக்களுக்கு அதிகாரம் இதையெல்லாம் சொல்கின்ற கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி’’ என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி. தமிழக CPIM செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி
Thirumavalavan Old Video Controversy : திமுக கூட்டணியில் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக வலம் வருவது தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. வெறும் கூட்டணி என்பதை தாண்டி கொள்கைரீதியாகவும் திமுக-விசிக இடையே வலுவான பிணைப்பு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் திமுகவிடம் இருந்து விசிக பிரிகிறதா? என்ற கேள்வியை அனைவரது மனதிலும் எழுப்பியுள்ளது.
புதுக்கோட்டையில் குரூப் 2 தேர்வை எழுத காலதாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு. அனுமதி மறுக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வந்தவர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்றனர்
Union Minister Nitin GadkariAbout National Highway in Tamil Nadu : தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
TNPSC Group 2 Exam 2024 in Tamil Nadu : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை 7,93,966 பேர் எழுத உள்ளனர். இதில் 3 லட்சத்து 9,841 பேர் ஆண்கள்; 4 லட்சத்து 84,074 பேர் பெண்கள்.
மதுபான கொள்கை முறைகேடு கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.