K U M U D A M   N E W S

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்

சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடலூர் மாவட்டத்தில் இரு கோவில்கள் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டற்ற போதைப்புழக்கத்தால் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்கிறது- சீமான் விளாசல்

திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இயக்குநர் ராஜு முருகன் மனைவியை டார்ச்சர் செய்த நிர்வாகிகள்.. கேள்வி எழுப்பியதால் ஆத்திரம்

பாலியல் குற்றச்சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக இயக்குநர் ராஜு முருகன் மனைவி ஹேமா, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அம்மனாக மாறிய நயன்தாரா! மூக்குத்தி அம்மன் 2... ஆரம்பமே அமர்க்களம்!

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை விழாவில் நயன்தாரா பங்கேற்றிருந்தது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அஜித் ரூட்டில் எந்த பட நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் கெத்து காட்டி வந்த நயன், மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றது பல்வேறு விமர்சங்களை முன்வைத்துள்ளது.

Gnanasekaran Case: ஞானசேகரனின் கூட்டாளியை தட்டி தூக்கிய போலீசார்

ஞானசேகரனின் கூட்டாளி ஆன பொள்ளாச்சி முரளி என்பவரை கைது செய்த பள்ளிக்கரணை போலீசார்

நிர்வாகிகள் புகார் - நழுவி சென்ற Minister Anitha Radhakrishnan திமுகவினர் அதிருப்தி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக புகார்

சென்னையில் 80 ஹோட்டல்கள் மீது பாயும் நடவடிக்கை

80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு மாநகராட்சி பரிந்துரை

விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

TVK Iftar Event: இப்தார் விருந்து.. சற்று நேரத்தில் வரும் Vijay.. ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் இஃப்தார் விருந்து ஏற்பாடு

அனைத்திற்கும் என் கணவர் தான் காரணம்.. உண்மையை உடைத்த பாடகி

இன்று நான் உயிரோடு திரும்பி வந்து உங்களிடம் பேசுவதற்கு என் கணவர் தான் காரணம் என்று பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.