K U M U D A M   N E W S

#JUSTIN : CM Stalin Letter To Central Govt: மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்!

இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். 

போலீசில் புகார் அளித்த வீட்டு உரிமையாளர்.. ரூ.5 கோடி கேட்டு யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ்!

''இந்த பொய் புகார் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவுக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் யுவன் சங்கர் ராஜா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்'' என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா மீது சென்னை போலீசில் புகார்.. என்ன விஷயம்?

''கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார்'' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

Minister Sivasankar : நான் தான் அமைச்சர்; அன்புமணி ராமதாஸுக்கு எப்படி தெரியும்? : சிவசங்கர் கேள்வி

Transport Minister Sivasankar on Anbumani Ramadoss : போக்குவரத்து துறை அமைச்சராக நான் இருக்கிறேன்; ஆனால் பேருந்து கட்டண உயர்வு அன்புமணி ராமதாஸருக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2வது முறை குண்டர் சட்டமா?.. யோகி ஆதித்தியநாத் ஆட்சியா?.. விளாசும் சீமான்

சகிப்புத்தன்மையற்ற திமுக அரசின் அடாவடித்தனங்களுக்கும், அட்டூழியப்போக்குகளுக்கும் மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்... கஞ்சா வழக்கில் போலீஸார் அதிரடி

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா?.. சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து..

77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என்று கூறிய நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தனர்.

அரியலூரில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்!

அரியலூரில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழங்கினார்.