K U M U D A M   N E W S

ஆசியக் கோப்பை சர்ச்சையில் புதிய திருப்பம்: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு!

ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம்: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலிருந்து விலகல்? - டி20 உலகக் கோப்பை கனவுக்கு சிக்கல்!

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்ட்யா, குவாட்ரைசெப்ஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிகிறது. அவர் முழுமையாகக் குணமடைந்தால் மட்டுமே 2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை: ஒரே பந்தில் வெற்றி! சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், சமன் ஆன போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஷ்தீப் சிங் (2 விக்கெட், 2 ரன்) பந்துவீச்சில் மிரட்ட, சூர்யகுமார் யாதவ் ஒரே பந்தில் வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி!

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.

மகளிர் உலகக் கோப்பை 2025.. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி பரிசுத்தொகை - ஐசிசி அறிவிப்பு!

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி என கடந்த உலகக் கோப்பையை விட 4 மடங்கு அதிகமாகப் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய யஷ் தயால்.. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இளமைத் தேசிய கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியைச் சேர்ந்தவுமான யஷ் தயால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

RCB வெற்றிக்கொண்டாட்ட விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரளா கிரிக்கெட் லீக் போட்டி.. அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்!

கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற புதிய சாதனயை படைத்துள்ளார்.

IND vs PAK: மகளிர் உலகக் கோப்பை போட்டி.. அக்டோபர் 5ல் கொழும்புவில் இந்தியா - பாகிஸ்தான் பலபரீட்சை!

மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.