K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=18250&order=created_at&category_id=12

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

துணை முதலமைச்சராகும் உதயநிதி..? - தனது ஸ்டைலில் பதில் சொன்ன ரஜினி | Kumudam News 24x7

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார் என்ற சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு என்னிடம் அரசியல் குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லியிருப்பதாக கோபமாக பதிலளித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா..? ஆட்சியர் மறுப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட வருவாய் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு தூத்துக்குடி ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்

#Breaking: அக்டோபர் 27-ல் த.வெ.க மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை.., தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் தாராபுரம் பகுதியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

BREAKING | சூட்கேஸில் பெண்ணின் உடல்: கொலையாளிக்கு கோர்ட் போட்ட உத்தரவு

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு நீதிமன்றக் காவல். மணிகண்டனை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

சுனாமி குடியிருப்பில் அசம்பாவிதம் – 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நாகை செல்லூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயகாந்த், மனைவி பாண்டி மீனா, 2 வயது குழந்தை மீது மேற்கூரை விழுந்துள்ளது

JUST IN | மாஞ்சோலை விவகாரம் – பிபிடிசி நிர்வாகத்திடம் இன்று விசாரணை

நெல்லை மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக பிபிடிசி தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் இன்று விசாரணை. 2 நாட்களாக தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று நிர்வாகத்திடம் விசாரணை நடைபெறுகிறது

கேரளாவில் வெடித்த சர்ச்சை.., 20 நடிகைகளுக்கு நடந்த சோகம்

கேரளாவில் பூதாகரமாக வெடித்துள்ள நடிகைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 20 நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் கொடுமை நடந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது.

இன்றோடு 100 ஆண்டுகள் கடந்தன.., ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் நன்றி

"சிந்து சமவெளி நாகரிகம் குறித்து ஜான் மார்ஷல் அறிவித்து இன்றோடு 100 ஆண்டுகள் ஆன நிலையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தில் திராவிடத்தின் பங்கு குறித்தும் தெரிவித்திருந்த ஜான் மார்ஷலுக்கு நன்றி - முதலமைச்சர் X தளத்தில் பதிவு

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024

JUST IN | 2 சிறுவர்களை கொலை செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே யோகராஜ் என்பவருடைய 2 மகன்கள் கொலை. 2 சிறுவர்களை கொலை செய்ததாக யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர் கைது

”இதனால் திமுகவின் சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும்” - கடம்பூர் ராஜு கடும் தாக்கு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு திமுகவில் உள்ள சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

"உதயநிதிஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி"-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவியை வழங்குவார் - கோவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

லட்டில் விலங்கு கொழுப்பு!! - ஆடிப்போன இந்தியர்கள்.. "உண்மையா..?"

லட்டில் விலங்கு கொழுப்பு!! - ஆடிப்போன இந்தியர்கள்.. "உண்மையா..?"

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!

#BREAKING || தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜா

தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.

#BREAKING | தீட்சிதர்கள் விற்ற நிலம் - நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#BREAKING || தேவநாதனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

#BREAKING || திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்னதாக முந்தையை ஆட்சியில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக சந்திரபாபு நாயடு குற்றம்சாட்டியிருந்தார்.

தாய் கையால் குழந்தைகளுக்கு விஷம்... தென்காசியில் நடந்த பயங்கரம்..

தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே அரளி விதையை சாப்பிட்டு 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதில் ஒரு சிறுவன் பலியான நிலையில் தாய் மற்றும் 2 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கல்வராயன் மலைப்பகுதி விவகாரம்... தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கல்வராயன் மலைப்பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.