K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=17775&order=created_at&category_id=12

விசிக மது ஒழிப்பு மாநாடு தொடங்கியது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் தொடங்கியது

திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது. 250 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து திருமலைக்கு திருக்குடை ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது

அவசர அவசரமாக ஆற்றில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் ஆற்றில் அவசரமாக நிவாரண பொருட்களை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் என்ஜின் செயலிழந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பெண் மீது கொடூர தாக்குதல்.. தலைமறைவானவரை பிடிக்க போலீஸ் வலை வீச்சு

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே தனது ஆட்டோவில் பயணித்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 4.5 சவரன் நகையை பறித்து சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உள்ள ராமநாதன் என்பவரை தேடி வருகின்றனர்,

டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்

டெல்லியில் இதுவரை இல்லாத அளவு 560 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரே ஒன்று திரண்டு கொண்டாட்டம்.. மன்னர் உடைவாள் கேரள அரசிடம் ஒப்படைப்பு

தமிழக, கேரள எல்லையான களியாக்கவிளையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் மன்னர் உடைவாள் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாம்சங் விவகாரம்... கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டாக அறிவித்துள்ளன. 

மீனவர்கள் பிரச்னை.. பாமக போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலர்கள்.. மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த டி.ஜி.பி

நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார். 

100 நாள் வேலை... பெண்கள் எடுத்த திடீர் முடிவு..

திண்டுக்கல் மாவட்டம் பழனிபட்டியில் 100 நாள் வேலையில் பணியாற்ற ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி வேலை வழங்காமல் திருப்பி அனுப்பியதால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்.. நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை பயன்படுத்திய செவிலியர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

துணை முதல்வர் உதயநிதியின் செயலாளர் நியமனம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிராமசபைக் கூட்டத்தில் மோதல்; கலவரமான கள்ளக்குறிச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குளாங்குறிச்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் கிராமத்தினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 1௦ மாவாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓடும் ரயிலில் Passenger-ஐ பந்தாடிய TTR.. பரபரப்பு காட்சிகள்

எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் பயணி மற்றும் டிடிஆர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் பயணியை டிடிஆர் தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தன்னை தாக்கிய டிடிஆர் மீது பயணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

சொத்து வரி உயர்வை கண்டித்து அக்.8ம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் அக்.8-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள், பேருராட்சிகளிலும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இஸ்ரேல் – ஈரான் போர்... எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

இந்தியர்கள் அவசியமின்றி ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சமூகநீதி நடைமுறையில் இல்லை – ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாட்டில் சமூகநீதி பேசப்படுகிறதே தவிர, அது நடைமுறையில் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் வெட்கமும், வேதனையும் படுகிறேன் என தெரிவித்தார். 

ஒரே நேரத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுக - அமமுகவினர்.. முற்றிய வாக்குவாதம்

சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காந்தி சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பதில் போட்டி ஏற்பட்ட நிலையில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

விசாரணை கைதி மரணம் - காவல்துறை விளக்கம்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

விண்ணை பிளந்த சத்தம்.. அதிர்ந்த மெரினா.. வான் சாகச ஒத்திகை நிகழ்ச்சி

இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான 2ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

அரசின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

இணையத்தில் பரவும் போலி தகவல்.. சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கு மாறாக வரும் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகளை நம்ப வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தவெக மாநாட்டின் பூமி பூஜை..எந்த தேதியில் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது

மகாத்மா காந்தியை புறக்கணித்தாரா திருமாவளவன்?

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அடையாறில் உள்ள காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை. இதனால் மகாத்மா காந்தியை திருமாவளவன் புறக்கணித்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.