K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

குமுதம்-கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி

குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி கோவையில் நடந்தது.

இந்த அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் – சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்

நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

ஊரகப் பகுதிகளில் உள்ள 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

பாலியில் வன்கொடுமை வழக்கு.. மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டிகள்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

#Breaking: கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள்.. அரியலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் கள்ளிப்பால் குடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் மாணவர்கள் விளையாட்டுத் தனமாக கள்ளிப்பாலை குடித்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது மாணவி தாக்குதல்... போராட்டத்தில் குதித்த ஓட்டுநர், நடத்துநர்கள்

சென்னை குரோம்பேட்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. போராட்டத்தில் குவித்த வியாபாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமித்திருந்த கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் கடைகள் அகற்றப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.