K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

அரசுப்பேருந்தை அலட்சியமாக ஓட்டிய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே செல்போனில் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

லட்டில் விலங்கு கொழுப்பு.. ஆந்திர முதலமைச்சர் விளக்கமளிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் விளக்கம் கேட்டுள்ளார்

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது 

RSS அணிவகுப்பு... தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

வருவாய் கோட்டாட்சியர் வாகனம் மோதிய விபத்து... பரிதாபமாய் பறிபோன உயிர்கள்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே வருவாய் கோட்டாட்சியர் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதி... விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் 4 காவலர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவக்குமார் குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் அவரை போலீசார் தாக்கி வந்தது விசாரணையில் அம்பலமானது.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி சீருடையில் மாணவிக்கு வளைகாப்பு.. வைரலான ரீல்ஸ்... ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  

போராட்டத்தை கைவிடாவிட்டால் நடவடிக்கை - சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை

ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை கைவிடாவிட்டால் வரும் திங்கள்கிழமை தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.