LIVE: Kamal Haasan Speech : ம.நீ.ம. பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு
Kamal Haasan Speech at Makkal Needhi Maiam General Meeting : மக்கள் நீதி மய்ய கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார்
Kamal Haasan Speech at Makkal Needhi Maiam General Meeting : மக்கள் நீதி மய்ய கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார்
Makkal Needhi Maiam General Meeting Resolution : மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம். யாருடைய பெயரையும்| இழுக்க வேண்டாம்; வாழு, வாழ விடு என விவாகரத்து குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளித்துள்ளார்.
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக 3 நாட்களாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிபிடிசி நிர்வாகத்திடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்திய நிலையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் ஜாகிர், ரபீக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாம்பலம், திருவல்லிக்கேணி,கோவை ஆகிய ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.