மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை... முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு, 'எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு, 'எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1000 கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிம்னற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டத்தின், திருத்தங்கள் செய்வது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
திண்டுக்கல் அருகே செட்டிகுளக்கரையில் தீனதயாள வர்மன் என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர்மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கோவை - கேரள எல்லையில் சுகாதாரத்துறை சார்பில் எல்லை பகுதிகளில் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது