K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

கொட்டித் தீர்த்த கனமழை.. தொடரும் மீட்பு பணி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர் கனமழை எதிரொலி... சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.

சுங்கச்சாவடியில் தேங்கிய மழைநீர்... மிதந்து செல்லும் வாகனங்கள்

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. 7 கவுன்ட்டர்கள் உள்ள நிலையில் மழை நீர் தேக்கம் காரணமாக 2 கவுன்ட்டர்கள் வழியாக மட்டுமே வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்தபடி செல்கின்றன.

ஓய்ந்தது மழை... களத்தில் அதிதீவிரமாக இறங்கிய தூய்மைப் பணியாளர்கள்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தூய்மைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைநீருடன் அடித்து வரப்பட்ட குப்பைகள், மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகங்களில் இலவச உணவு

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

கன்னியாகுமரி அழிக்கால், பிள்ளைத்தோப்பில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன. 

இரவில் இருந்து குறைந்தது மழை.. பாரிமுனையில் தேங்கிய மழைநீர் வடிந்தது

சென்னை பாரிமுனையில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தது. பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.

ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி

கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ.120க்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்ட நிலையில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.90க்கு விற்பனையாகிறது.