டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. தீபாவளி போனஸ் அறிவித்தது டாஸ்மாக் நிர்வாகம்
டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.16,800 வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது
டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.16,800 வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டி.ஐ.ஜி ராஜலட்சுமியிடம் நேரடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 11,176 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 2,910 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நாளை மறுநாள் வங்கக் கடலில் உருவாகும் டானா புயல், தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ED அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமில் வெளிவந்தார். இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்கவும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடர் மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.