சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அவ்வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.
சகோதரர் மீது தாக்குதல் புகார்:
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி இளையநகர் பகுதியில் உள்ள மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் கிளாட் ஆகியோரை தாக்கியதாக மரிய வில்சன் மீது புகார் அளிக்கப்பட்டது. குடும்ப சொத்து தொடர்பான பிரச்சினையின் பின்னணியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் சில பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பின்னர் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு:
இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், மரிய வில்சன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இதற்கிடையில், இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் நோக்கில் வழக்கு சமரச தீர்வு மையத்திற்கும் அனுப்பப்பட்டது.
சமரச தீர்வு மையத்தில் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அமைச்சர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும், அமைச்சர் சார்பில் அவரது தந்தை நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்:
“மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல. நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என்று அவரால் கூற முடியாது.”
என்று நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோதுகூட நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார். நீங்கள் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல.”
என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அமைச்சராகும் முன்பு ஆஜரானவர், பதவிக்கு வந்த பிறகு ஏன் ஆஜராக மாட்டார்?”
என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
“வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமே?”
இதைக் கேட்ட நீதிபதி, வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும்போது புதுச்சேரி நீதிமன்றத்திற்கும் சென்று ஆஜராக முடியாதா என கேள்வி எழுப்பினார்.
“இங்கிருந்து புதுச்சேரிக்கு இரண்டரை மணி நேரம்தானே ஆகிறது. சாலை வசதியும் நன்றாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதது ஏன்?”
என்ற கேள்வியையும் நீதிபதி எழுப்பியுள்ளார்.
மேலும், “அமைச்சர் என்பதால் சட்டத்திற்கு மேலானவர் என்று அர்த்தம் கிடையாது.”
என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதால், அவர் சட்டத்திற்கு மேலானவர் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகக்கூடாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இன்று மதியம் மீண்டும் விசாரணை
அமைச்சர் தரப்பில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் காரணமாக நேரில் ஆஜராக முடியாத நிலை இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த விளக்கத்தில் திருப்தியடையாத நீதிபதி, அமைச்சர் எந்த தேதியில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
மரிய வில்சன் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவின் தகுதி மற்றும் வழக்கில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில், “அமைச்சராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கருத்தை நீதிமன்றம் தனது கேள்விகள் மூலம் ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.
வழக்கை வாபஸ் பெற்றார்:
உயர்நீதிமன்றதின் கண்டனங்களை தொடர்ந்து, தற்போது அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவினை வாபஸ் பெற்றுள்ளார். மேலும் புதுச்சேரியில் வழக்கு விசாரணையின் போது மரிய வில்சன் ஆஜராவதாக உறுதியளித்துள்ளார். ஆகையால், இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்தாலும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகாமல் இருப்பது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனங்களும், கேள்விகளும் அமைச்சர் மரிய வில்சனை ரிவர்ஸ் கியர் எடுக்க வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
சகோதரர் மீது தாக்குதல் புகார்:
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி இளையநகர் பகுதியில் உள்ள மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் கிளாட் ஆகியோரை தாக்கியதாக மரிய வில்சன் மீது புகார் அளிக்கப்பட்டது. குடும்ப சொத்து தொடர்பான பிரச்சினையின் பின்னணியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் சில பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பின்னர் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு:
இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், மரிய வில்சன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இதற்கிடையில், இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் நோக்கில் வழக்கு சமரச தீர்வு மையத்திற்கும் அனுப்பப்பட்டது.
சமரச தீர்வு மையத்தில் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அமைச்சர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும், அமைச்சர் சார்பில் அவரது தந்தை நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்:
“மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல. நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என்று அவரால் கூற முடியாது.”
என்று நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோதுகூட நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார். நீங்கள் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல.”
என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அமைச்சராகும் முன்பு ஆஜரானவர், பதவிக்கு வந்த பிறகு ஏன் ஆஜராக மாட்டார்?”
என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
“வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமே?”
இதைக் கேட்ட நீதிபதி, வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும்போது புதுச்சேரி நீதிமன்றத்திற்கும் சென்று ஆஜராக முடியாதா என கேள்வி எழுப்பினார்.
“இங்கிருந்து புதுச்சேரிக்கு இரண்டரை மணி நேரம்தானே ஆகிறது. சாலை வசதியும் நன்றாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதது ஏன்?”
என்ற கேள்வியையும் நீதிபதி எழுப்பியுள்ளார்.
மேலும், “அமைச்சர் என்பதால் சட்டத்திற்கு மேலானவர் என்று அர்த்தம் கிடையாது.”
என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதால், அவர் சட்டத்திற்கு மேலானவர் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகக்கூடாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இன்று மதியம் மீண்டும் விசாரணை
அமைச்சர் தரப்பில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் காரணமாக நேரில் ஆஜராக முடியாத நிலை இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த விளக்கத்தில் திருப்தியடையாத நீதிபதி, அமைச்சர் எந்த தேதியில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
மரிய வில்சன் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவின் தகுதி மற்றும் வழக்கில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில், “அமைச்சராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கருத்தை நீதிமன்றம் தனது கேள்விகள் மூலம் ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.
வழக்கை வாபஸ் பெற்றார்:
உயர்நீதிமன்றதின் கண்டனங்களை தொடர்ந்து, தற்போது அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவினை வாபஸ் பெற்றுள்ளார். மேலும் புதுச்சேரியில் வழக்கு விசாரணையின் போது மரிய வில்சன் ஆஜராவதாக உறுதியளித்துள்ளார். ஆகையால், இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்தாலும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகாமல் இருப்பது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனங்களும், கேள்விகளும் அமைச்சர் மரிய வில்சனை ரிவர்ஸ் கியர் எடுக்க வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
LIVE 24 X 7














