K U M U D A M   N E W S

வருவாய் கோட்டாட்சியர் வாகனம் மோதிய விபத்து... பரிதாபமாய் பறிபோன உயிர்கள்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே வருவாய் கோட்டாட்சியர் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதி... விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் 4 காவலர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவக்குமார் குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் அவரை போலீசார் தாக்கி வந்தது விசாரணையில் அம்பலமானது.

’ராகுல் காந்தி நம்பர் ஒன் பயங்கரவாதி’.. மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு!

''ராகுல் காந்தியின் கருத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் வரவேற்றுள்ளனர். எப்போது இதுபோன்ற நபர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனரோ, அப்போதே அவர் (ராகுல் காந்தி) நம்பர் ஒன் பயங்கரவாதியாக விட்டார்'' என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி சீருடையில் மாணவிக்கு வளைகாப்பு.. வைரலான ரீல்ஸ்... ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  

போராட்டத்தை கைவிடாவிட்டால் நடவடிக்கை - சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை

ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை கைவிடாவிட்டால் வரும் திங்கள்கிழமை தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பூதாகரமாக வெடிக்கும் திருப்பதி லட்டு விவகாரம்.. ஆய்வுக்கு தயார்.. நெய் சப்ளை செய்த நிறுவனம் அதிரடி

திருப்பதி லட்டு தொடர்பான எந்த ஆய்வுக்கும் தயார் என திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டை ஃபுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது 

Miss India Worldwide 2024: உலகளாவிய இந்திய அழகியாக 24 வயது மாணவி தேர்வு.. பாலிவுட் நடிகையாக விருப்பம்!

டீன் பிரிவினருக்கான போட்டியில் தென் அமெரிக்காவின் குவாடலூப்வை சேர்ந்த சியரா சுரெட் (Sierra Suret)வெற்றி வாகை சூடினார். நெதர்லாந்தை சேர்ந்த ஸ்ரேயா சிங் 2வது இடமும், ஷ்ரதா டெட்ஜோ 3வது இடமும் பெற்றனர்.

நதிகள் சீரமைப்பு.. முதலமைச்சர் ஆலோசனை

சென்னையில் உள்ள நதிகள் சீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்