K U M U D A M   N E W S

மாஞ்சோலை விவகாரம்.. மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக 3 நாட்களாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிபிடிசி நிர்வாகத்திடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்திய நிலையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின்..

இரு தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் ஜாகிர், ரபீக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.  

ரஷித் கான் சுழலில் சிக்கிய தென்னாப்பிரிக்கா.. ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை!

9 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது வென்றார். நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ம.நீ.ம. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாம்பலம், திருவல்லிக்கேணி,கோவை ஆகிய ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

3 ரவுண்டு போலீஸ் துப்பாக்கி சூடு.. பிரபல ரவுடி ஆல்வின் மீது குண்டு பாய்ந்து படுகாயம்

பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டதில், இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்.. வைத்திலிங்கம் மீது பாய்ந்தது லஞ்ச வழக்கு

27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பிய நெய் கலப்படமா.. ? - ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் சோதனை

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.