K U M U D A M   N E W S

வக்ஃப் சட்டத் திருத்தம்... இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும்: அன்புமணி

வக்ஃப் சட்டத் திருத்தத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

லட்டு விவகாரம்.. திருப்பதியில் அதிரடியாக களமிறங்கிய சிறப்பு விசாரணை குழு

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் விசாரணை குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.

ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.. தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்.. அதிமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீரான மின்விநியோகம் கோரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் வரிசையில் மிதுன் சக்கரவர்த்தி... தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, மழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

அமைச்சரான பின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

தாக்குதல் சம்பவம்.. மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை கோடியக்கரை அருகே பைபர் படகு மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து செருதூர் பகுதி மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TVK Flag Issue : தவெக கொடி பஞ்சாயத்து ஓவர்... க்ரீன் சிக்னல் கொடுத்த தேர்தல் ஆணையம்... விஜய் நிம்மதி!

TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.