Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Today Headlines Tamil
01 மணி தலைப்புச் செய்திகள்
01 மணி தலைப்புச் செய்திகள்
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என இளைஞர் புகார்.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து.
சாலை சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தி சீரமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.
யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கணவன், மனைவி மற்றும் குழந்தை படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
பொது நன்மை எனக்கூறி மாநில அரசுகள் அனைத்து தனியார் சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 8க்கு ஒன்று என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் உத்தரவு என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் ரக்ஷிதா என்பவர் வீட்டில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.