K U M U D A M   N E W S

Agni Brothers Murder : பழிக்கு பழி... திருப்பூரில் நிகழ்ந்தேறிய அக்னி பிரதர்ஸின் நான்காவது கொலை!

Agni Brothers Murder in Palladam : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நண்பனை கொலை செய்ததற்காக பழிக்கு பழி தீர்த்த அக்னி பிரதர்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“இஸ்லாமிய சமுதாயத்தை பாஜக ஒதுக்குகிறது” - விஜய் வசந்த் எம்.பி. தாக்கு

அதானிக்கும், அம்பானிக்கும் சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை தாரை வார்ப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும் என வசந்த் விஜய் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

Heavy Rain: 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதானி குழும முறைகேட்டில் 'செபி' தலைவர் மாதபிக்கும் தொடர்பு?.. ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை மாதபி புரி புச் முழுமையாக மறுத்துள்ளார். ''எங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு; லட்சங்களில் நிதியுதவி வழங்கிய செஸ் சாம்பியன் குகேஷ்!

உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன குகேஷ், வயநாடு நிலச்சரிவிற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தீரா உலா 2: தவாங் யுவதியும் மேஜிக் மொமண்ட்ஸும்

குவஹாத்தியில் இருந்து தவாங் சராசரியாக ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. பேருந்துப் பயணம் என்கையில் இதனை நெடுந்தொலைவு என்று சொல்லி விட முடியாதுதான்.

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.38 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பி.எப், கிராஜுவிட்டி மற்றும் விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வூதிய பணப் பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

விஸ்வரூபம் எடுத்த சிலை கடத்தல் வழக்கு.. சிபிஐ வளையத்திற்குள் பொன் மாணிக்கவேல்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பல்வேறு சிலைகளை கண்டுபிடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற பாராட்டை பெற்ற ஓய்வு பெற்றவர் ஐஜி பொன் மாணிக்கவேல், மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தியாவில் விரைவில் பெரிய சம்பவம் இருக்கு'.. பரபரப்பை பற்ற வைத்த ஹிண்டன்பர்க்!

இந்தியாவில் பிரபலமான தொழில் அதிபர் கெளதம் அதானியை கதிகலங்க வைத்தததான் இந்த ஹிண்டன்பர்க். அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது.

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டின் டி.வி. சோமநாதன் ஐ.ஏ.எஸ். நியமனம்

மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி. சோமநாதனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

'முதல்வர் ஸ்டாலினே உதயநிதியை ட்ரோல் பண்ணிட்டார்... நாங்க என்ன சொல்ல?' - கலாய்த்த அண்ணாமலை!

''தமிழக முதல்வர் ஸ்டாலினே வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை எனக்கூறி உதயநிதியை ட்ரோல் (Troll ) பண்ணியுள்ளார். முதல்வர் ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்து விட்டதால் இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்வது?'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆண்கள் உரிமைத் தொகை.. பல்டி அடித்த அமைச்சர் பெரிய கருப்பன்..

ஆண்கள் உரிமைத் தொகை குறித்து தான் பேசியதை திரித்து வெளியிட்டுள்ளனர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

'இதுதான் தமிழ்நாடு'.. வைகோவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தம்பிதுரை.. தமிமுன் அன்சாரி பாராட்டு!

''வைகோ பேசுவதற்கு நீங்கள் கூடுதல் நேரம் கொடுக்கவில்லை. ஆனால் ராம்கோபால் யாதவை எந்த அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்தீர்கள்?'' என்று மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கை நோக்கி தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்..

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Olympic Medal: ஒரே வாரத்தில் துருபிடித்த ஒலிம்பிக் பதக்கம்.. அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு!

''ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றபோது, தொடக்கத்தில் அந்த பதக்கம் பளபளப்புடன் இருந்தது. ஆனால் வீட்டுக்கு வந்த ஒரு வாரத்துக்குள் பதக்கம் வெளுத்து விட்டது'' என்று அமெரிக்க வீரர் நிஜா ஹஸ்டன் கூறியுள்ளார்.

கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. ஆளுநர் நிகழ்ச்சியில் அதிர்ச்சி

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கருப்புச் சட்டை அணிந்த மாணவர்கள், மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'நான் நடித்து இருந்தால் இந்த படம் வெளிவராது'.. திருமாவளவன் ஓபன் டாக்!

''திருமாவளவன் சாரிடம் நீதி இருக்கும். நேர்மை இருக்கும். உண்மை இருக்கும். யார் தவறு செய்தாலும், அவர்களுக்கு நேர்மையுடன் உடனடியாக திருமாவளவன் தண்டனை கொடுப்பார்'' என்று 'தோழர் சேகுவேரா' பட விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார்.

'நீட் தேர்வை ரத்து செய்ய இது போதும்'.. காரணங்களை பட்டியலிட்ட அன்புமணி!

''தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Kanguva Trailer: சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... இதுதான் விஷயமா!

சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

Shobita Dhulipala: “கவித கவித..” குறுந்தொகை வரிகளோடு காதல் கதை சொன்ன சோபிதா துலிபலா!

Shobita Dhulipala Engagement Photos wih Naga Chaitanya : நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சோபிதா துலிபலா, நாக சைதன்யா மீதான காதலை குறுந்தொகை பாடலுடன் கவிதையாக தெரிவித்துள்ளார்.