K U M U D A M   N E W S

ஆன்மிகம்

பங்குனி ஆறாட்டு திருவிழா.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பங்குனி ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.  நாளை கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.

காணக்கிடைக்காத அதிசயம்.. சிவபக்தர்களின் கவனத்திற்கு!

நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி பத்திரகாளியம்மன் தூக்க நேர்ச்சை திருவிழா..  பக்தர்கள் சாமி தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயில் தூக்கநேர்ச்சை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா.. குதிரை ஆட்டத்துடன் தேரோட்டம்!

அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு குதிரை ஆட்டத்துடன் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய  ராஜகோபுர  கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை.. ஏராளமானோர் பங்கேற்பு!

மேலூரில் முத்துமாரியம்மன் கோவிலில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி நடைபெற்ற பூஜையில் திரளான பெண்கள் கலந்துக் கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்திய பக்தர்கள்.. கோயில் நிர்வாகம் தகவல்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்  3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627 ரூபாயை  பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புற்றடி மாரியம்மன் தீமிதி திருவிழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம்  அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீயில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

பண்ணாரி மாரியம்மன் கோயில் 'குண்டம்' திருவிழா இன்று தொடக்கம்!

லட்சக்கணக்கான பக்தர்கள்  தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.