K U M U D A M   N E W S

மண்டை ஓட்டுடன் பில்லி சூனியம்..மிரண்டு போன மாலத்தீவு அதிபர்.. கைதான அமைச்சர்கள் பதவி பறிப்பு

மாலத்தீவில் அதிபர் முகமது மொய்சுவுக்கு, அமைச்சர்கள் பாத்திமா ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஆதம் ரமீஸ் பில்லி சூனியம் வைத்ததாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குபேர பகவானுக்கு திருக்கல்யாணம்..தரிசனம் செய்ய குடும்பத்தோடு ரத்தினமங்கலம் வாங்க

ரத்தினமங்கலம் குபேரபகவானுக்கு நாளை 30ஆம் தேதி ஞாயிறுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி.. எந்த நாட்களில் என்ன அலங்காரம்

தஞ்சை பெரியகோவிலில் வாராஹிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை... 603 ரன்கள் குவித்து இந்திய 'சிங்கப் பெண்கள்' சாதனை!

சென்னை: மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் 603 ரன்கள் குவித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு வாய்ப்பில்லை ராஜா... அமைச்சர் முத்துசாமி சொன்ன காரணத்தை கேட்டா ஆடிப்போவீங்க!

சென்னை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சனி வக்ர பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்.. பரிகாரம் என்ன?

நவ கிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை 4 மாத காலம் வக்ரமடைவார். கும்ப ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு மணிக்கு வக்ர கதியில் பயணம் செய்ய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே தெரிந்து கொள்வோம்.

தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை.. ரூ.10 லட்சம் அபராதம்.. முதல்வர் ஸ்டாலின்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி நில அபகரிப்பு..தலைமறைவான எம்ஆர் விஜயபாஸ்கர்..சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ்

100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நீலகிரியில் கனமழை நீடிக்கும்.. உஷார் மக்களே.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.