K U M U D A M   N E W S

கவரைப்பேட்டை ரயில் விபத்து: செல்போன்கள் ஆய்வு.. தீவிர விசாரணையில் ரயில்வே காவல்துறை

கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.

தவெக மாநாடு.. விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிகட்ட பணிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Kanguva: “100 தடவை பார்த்துட்டேன்... தரமா வந்துருக்கு..” சூர்யாவின் கங்குவா விமர்சனம் சொன்ன பிரபலம்!

சூர்யா நடித்துள்ள கங்குவா அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படம் எப்படி வந்துள்ளது என பாடலாசிரியர் மதன் கார்க்கி விமர்சனம் தெரிவித்துள்ளார். கங்குவா படம் பற்றி மதன் கார்க்கி ட்வீட் செய்துள்ளது, சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இருக்கு..கனமழை இருக்கு.. - எச்சரிக்கும் வனிலை மையம்..எதிர்கொள்ள தயாரா இருங்க மக்களே!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

வயநாடு மக்களவை தொகுதி தேர்தல்.. பிரியங்கா காந்தி குடும்பத்துடன் வேட்பு மனு தாக்கல்

வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக குடும்பத்துடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார் பிரியங்கா காந்தி. அவருக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாநகரில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் 2 பள்ளிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருட்டு: வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்  நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீட்டு கட்டுப்போல் சரிந்த கட்டிடம்.. 15 மணி நேரமாக போராடும் வீரர்கள் - மீட்பதில் சிக்கல்..?

தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கட்டடம்  சட்ட விரோதமாக கட்டப்பட்டு வந்ததாகவும், கட்டட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திமுக கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எங்களால் இனிமேல் பொறுக்க முடியாது.. தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தீபாவளி போனஸ் வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.