K U M U D A M   N E W S

தீபாவளி பண்டிகை கோலாகலம்... கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள்!

இன்று (அக். 31) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மக்களே அலர்ட்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சருக்கு என்ன தயக்கம்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி

முதலமைச்சருக்கு தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம் உள்ளது. அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

தகாத வார்த்தைகளால் பேசியவரை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப்பேருந்து நடத்துநரை பயணிகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தகாத வார்த்தைகளால் பேருந்தில் பேசியவரை தட்டிக் கேட்டதால் நடத்துநரை அவருடன் வந்த நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தித்திக்கும் தீபாவளி... களைகட்டிய கொண்டாட்டங்கள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

நாதக பொதுக்கூட்டம்.. பெருந்திரளாக ஒன்று கூடுவோம்! சீமான் அறிக்கை!

தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

“சின்ன தளபதி சிவகார்த்திகேயன் வாழ்க... யாரும்மா நீ...” ரசிகையால் பதறிய SK... வைரலாகும் வீடியோ!

இன்று வெளியான அமரன் படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் சிவகார்த்திகேயன். அப்போது ரசிகை ஒருவர் ‘சின்ன தளபதி’ என கத்துவதைப் பார்த்து, சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.