Velachery Accident CCTV Footage: சாலை விபத்தில் உயிரிழந்த நடிகரின் மகன்; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
Velachery Accident CCTV Footage: சாலை விபத்தில் உயிரிழந்த நடிகரின் மகன்; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
Velachery Accident CCTV Footage: சாலை விபத்தில் உயிரிழந்த நடிகரின் மகன்; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் சடலமாக மீட்பு.
ரூ. 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகையை செலுத்த சொல்லி நோட்டீஸ் வந்ததால், அதிர்ந்து போன வாலிபர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்,
சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் நித்திஷ் ஆதித்யா விபத்தில் சிக்கி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
உதகையில் தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் நாளையும் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட்டுகிறது. இதனால் ஏராளாமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதை எதிர்த்து என் எல் சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் ஷோரனூரில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியாகினர். இவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.