K U M U D A M   N E W S

மூத்த மருத்துவர்களை பணியில் நியமிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,  கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என  தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சியர் போட்ட உத்தரவு... மதிக்காத பேருந்து ஓட்டுநர்கள்... உடனடி ஆக்ஷனால் சலசலப்பு

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத 6 பேருந்துகளுக்கு ரூ.60,000 அபராதம் விதித்து ஆட்சியர் அதிரடி

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கையால் ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும் - இரா.முத்தரசன் வேதனை

புதிய கல்விக்கொள்கையில் தற்போது 3-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 8-ம் வகுப்புசெல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை இடை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழிக் கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தஞ்சையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஆதியோகி திருவுருவம் 112 அடியில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன..!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அழகும் ஆன்மீகமும் சங்கமிக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் ஆதியோகி. தமிழகத்தின் குறிப்பாக கோவையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக ஆதியோகியின் திருவுருவம் மாறியுள்ளது.

கடலூரில் 2 நாட்கள் முதலமைச்சர் கள ஆய்வு..  நெய்வேலியில் ரோட் ஷோ

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபடுகிறார்.

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கமா? இல்லயா? என்பது விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கல்வி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

"Get Out Modi என கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா?" - அண்ணாமலை ஆவேசம்

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லட்டும் பார்க்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

"நிதியை தராவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த தயார்" - உதயநிதி

அமித்ஷா அறிவிப்பில் தமிழ்நாட்டின் பெயர் இல்லை