2026-ல் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் - திருமாவளவன் பேட்டி
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை, 21 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக அறிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதால் விலகுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (வயது 82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது சமீபத்திய மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரது வழக்கமான உடல் பரிசோதனையின் போது, அவரது உடலில் கண்டறியப்பட்ட ஒரு கட்டியை சோதனை செய்தபோது, இது புரோஸ்டேட் புற்றுநோய் என உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.