K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

ஜூன் மாதம் 27-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’..!

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக இருப்பதாகவும், இத்திரைப்படத்தில் மாறாத மர்மங்கள் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை திட்டம்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 17 பேர் கைது!

மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழி சாலை விரிவாக்க திட்டத்திற்காக மரத்தை வெட்டுவதற்காக வந்த ஜே.சி.பி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நில அளவை செய்யாமல் மரத்தை வெட்டக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஸாவின் குழந்தைகள் கூட எதிரிகள்தான் - இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்!

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூ.10,000 அபராதமும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தயாரான ஐஃபோன்களுக்கு 25% வரி – டிரம்ப் அரசின் அதிரடி முடிவு!

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஐஃபோன்கள் தயாரிக்கப்பட்டாலும் 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போலி ஆபாச வீடியோ: சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நடிகை கிரண்!

பிரபல நடிகை கிரண் போலி ஆபாச வீடியோ வெளியானது குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கும் பருவமழை: 24 மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்பு!

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'வளர்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047' - பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2047ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ தான்.. பெயர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

மைசூர் பாக்கில் உள்ள 'பாக்' என்ற வார்த்தை பாகிஸ்தானை குறிப்பதால், ஆப்ரேஷன் சிந்தூர்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு.. காவல்துறை விசாரணை!

மதுரையில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியின்போது மின்சார வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.