K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

உக்ரைன் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா தாக்குதல்.. 14 பேர் உயிரிழப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில், உக்ரனை சேர்ந்த 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ்-ல் வானுயர கட்டடத்தின் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 44-க்கும் மேற்பட்டோர் காயம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை - தமிழக அரசு உறுதி

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவை கார் வெடிப்பு வழக்கு: அரபிக் கல்லூரி மாணவர்கள் குறியாக தீவிரவாத திட்டம்!

கோவை கார் குண்டுவெடிப்பில் வழக்கில், அரபிக் கல்லூரிக்கு வரும் மாணவர்களை குறி வைத்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

குண்டு போட்ட வைகைச்செல்வன்.. சிதறும் அறிவாலய கூட்டணி..? நழுவும் திருமா?

திமுக கூட்டணி குறித்து பேட்டியளித்த வைகைச்செல்வன் பெரிய குண்டைத் தூக்கி போட்டுள்ளார். அப்படி அவர் கூறியது என்ன? சிதறப்போகிறதா அறிவாலய கூட்டணி? இதனால் அறிவாலயம் அலறிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 வது நாளாக தொடரும் மோதல்.. இரு நாடுகளிலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 ஆவது நாளாக தொடரும் மோதலால் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 326 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தினேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தினேன் என்று கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசி வாயிலாக பேசியபோது மறுத்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடரும் அறிவிக்கபடாத மின்வெட்டு.. நள்ளிரவு வேளையில் பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்!

காஞ்சிபுரம் பகுதிகளில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரதான சாலையில் நள்ளிரவு வேளையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் வழக்கில் ஆவணங்கள் போதுமானதாக இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போதை மருந்து விற்பனை.. பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் கைது!

கோவையில் போதை மருந்து விற்பனை செய்த பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை.. அதிபரிடம் தெரிவித்த பிரதமர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.