நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய கடும் விமான தாக்குதலில் வெறும் ஒரு நாளிலேயே 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயதுடைய லீ என்ற முதியவர், சில வாரங்களுக்கு முன் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வேலூர் அருகே டோல்கேட் பகுதியில் நெல்லுக்கு உரியவிலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் சினிமா பாணியில் ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வட மாநில ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. சம்பந்தப்பட்ட வட மாநில நபர் குறித்து பொதுமக்கள் அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது, இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
இமாச்சல பிரதேசத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.14 லட்சம் கொடுத்து HP21C-0001 என்ற ஃபேன்சி எண்ணை சஞ்சீவ் என்ற நபர் வாங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் யாரு சாமி நீ , ரொம்ப வசதியா இருப்பாரோ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.