K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை: குழந்தை கடத்தல் கும்பலுக்குச் செக்!

பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் - நயினார் நாகேந்திரன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார்களோ அதன் படி கேட்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சாவன் மாதம்: காசியாபாத் KFC-வில் அசைவத்திற்கு தடை!

இந்துக்களின் புனிதமான சாவன் மாதத்தில் அசைவம் விற்கக் கூடாது எனக் காசியாபாத் KFC உணவகத்தில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்தக் கிளையில் தற்போது சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழப்பு!

பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

பாராக்ளைடிங் விபத்து: 'Fearless Felix' ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் மறைவு!

இத்தாலியில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து நீச்சல்குளம் அருகே விழுந்து, ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி மோசடி.. வங்கி இஎம்ஐ மூலம் போலீஸிடம் சிக்கிய மோசடி மன்னன்!

அரசு தொடர்பான வேலைகளையும், சொத்தையும் மீட்டுத் தருவதாகக் கூறி 62.8 லட்சம் மோசடி செய்த மோசடி மன்னன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்கொலை எண்ணத்தை மாற்றிய நாய்.. செல்ல நாய்க்காக அனைத்தையும் உதறிய கோடீஸ்வரர்!

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோடகா சாய்டோ (வயது 54) என்ற கோடீஸ்வரர், ஒரு செல்ல நாயின் மீது கொண்ட பாசத்தின் காரணமாகத் தனது ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய பாதையில் பயணிக்கிறார்.

நேர்மைக்கு கிடைத்த பரிசு.. சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து!

கார் மறுக்கப்பட்டதாக புகார் அளித்த மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்ட நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

காவலர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - முதல்வர்

பொதுமக்களிடம் காவல் துறையினர் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.