K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

மேயர் பிரியாவுக்கு எதிராக ஆபாச வீடியோக்கள்: போலீசில் பரபரப்பு புகார்!

சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

சிறுநீரக திருட்டு விழிப்புணர்வு - ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நுழைந்த பாஜக நிர்வாகி கைது!

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் வந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காதலித்து ஏமாற்றினார்.. நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை நடிகை பரபரப்பு புகார்!

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்.. ஐ.டி. ஊழியர் பெண் சென்னையில் கைது!

கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ரினே ஜோஸ்லிடா என்ற இளம்பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்லா எழுத்து வடிவங்களையும் நானே உருவாக்கினேன் - இயக்குநர் பாலாஜி வேணுகோபால்

'குமார சம்பவம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

உச்சத்தை தொட்ட தங்கம்விலை.. நகை வாங்குவோர் அதிர்ச்சி.. சவரன் விலை ரூ.80,480-ஆக உயர்வு!

தங்கம் விலை இன்று காலையில், சற்று குறைந்த நிலையில், மதியம் மீண்டும் 1 கிராம் ரூ.10,000 தாண்டியது. இன்று காலை 1 கிராம் ரூ.35 குறைந்து, ரூ.9,970-க்கு விற்பனையானது. மதியம் மீண்டும் ரூ.90 அதிகரித்து, அதிகரித்து, ரூ10,060 ஆக விற்பனையாகிறது.

ஹரியானாவில் கனமழை: மாருதி சுசுகி குடோனில் 300 கார்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்முறையாக காவலர் தின கொண்டாட்டம்.. 46 காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருதுகள் அறிவிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக செப்டம்பர் 6 இன்று காவலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.