K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அந்தோனியார் தேவாலய திருவிழா... களைக்கட்டும் ஜல்லிக்கட்டு..!

அரியலூர் புனித அந்தோனியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 700 மாடுகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது.. விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு..!

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது அவற்றையெல்லாம் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை தொடர்ந்து  முதல்வரின் பேரன்  இன்பநிதியும் மக்களுக்கு நிறைய செய்ய உள்ளார் என இன்பநிதியை அரசியலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

மாசி மாத அமாவாசை மயான கொள்ளை நிகழ்ச்சி..பக்தர்கள் சாமி தரிசனம்..!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோயில்களில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இந்த திருவிழாவில் ஏராளமான பக்தகர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

மூக்கை நுழைத்த Mrs. மாண்புமிகு? மூடி மறைக்கும் 2 சீனியர்கள்? கடும் அப்செட்டில் தலைமை?

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, சீனியர் மாண்புமிகுகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் தலைமை கடும் அப்செட்டாகியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது.

கிரிப்டோ கரன்சி மோசடி - தமன்னா, காஜலை விசாரிக்க முடிவு?

கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை புதுச்சேரி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்

மழையால் காப்பாற்றப்பட்ட மானம்.. Pakistan-க்கு இப்படி ஒரு நிலையா

9-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் vs வங்கதேசம் மோதவிருந்தன

சீமான் வீட்டு காவலாளி உள்பட 2 பேர் புழல் சிறையில் அடைப்பு