K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் தகவல்

மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பெயரால் 8 மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறுகிறேன் - அனுராக் காஷ்யப்

பாலிவுட் சினிமாவில் எதார்த்தம் இல்லை என்று கூறியுள்ள அனுராக் காஷ்யப், இனி பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும்,  விரைவில் மும்பையை காலி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் அப்டேட்டாக இல்லை - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் ED ரெய்டு

சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்

புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்

புழல் மத்திய சிறை சிறப்பான பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

பாஜகவினரை கண்டித்து திமுகவினர் போராட்டம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் -திமுகவினர் எதிர்ப்பு

சிதம்பரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள்.. பொதுமக்கள் போராட்டம் |

சிதம்பரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஓமக்குளம் பகுதியில் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்