ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. லாக் ஆன புதுச்சேரி.. மிஸ் ஆன சென்னை
4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.
4 நாட்கள் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல், வட தமிழகம் - புதுச்சேரி இடையே நேற்றிரவு கரையை கடந்தது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் நிலையில், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை
திருவள்ளூர் யமுனா நகரில் வெள்ள நீர் வடியாததால் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் அவதி
செண்பகத்தோப்பு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
சென்னை விமான நிலைய அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்
மக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை மட்டும் எடுத்துகொண்டு குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் - வானிலை ஆய்வு மையம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை பெரம்பூர் ஜமாலியாவில் நீரில் மூழ்கிய சாலைகள்
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் சூழலில், கடல் நீர் மீனவ கிராமங்களுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலினால் ஏற்படும் தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்து வரும் கனமழையால், 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக கடலூரில் உயர்கோபுர மின்விளக்குகளை அகற்றும் பணி தீவிரம்
சென்னையில் தொடர் கனமழைக்கு இடையிலும் சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள்
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டு உள்ளன.
10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 7 செ.மீ மழைபதிவாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.
கர்நாடகாவில் 20 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 40 வயது பெண்ணின் உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் திரெளபதி முர்மு பங்கேற்க இருந்த நிலையில் பயணம் ரத்து
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை சாலை நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளது.