K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

சீமானுக்கு கொலை மிரட்டல்.. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா சீட் இல்லை என்றாலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் - துரை வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கிறதோ இல்லையோ திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று துரைவைகோ தெரிவித்துள்ளார்.

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் கேப்டனின் மோதிரத்தை விஜய பிரபாகரனுக்கு அணிவித்தார்.

திருவண்ணாமலை கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைதாண்டி துப்பாக்கிச்சூடு!

தெற்கு காஷ்மீரின் பாரக்வால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைதாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

காமன்வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடிக்கு எதிரான வழக்கை முடித்துவைத்த அமலாக்கத் துறை!

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் ஊழலில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறையின் அறிக்கையை, தில்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

சுற்றுலா வாகனங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க வழக்கு.. ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க உத்தரவு

படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெகாசஸ் வழக்கு: சேதவிரோதிகள் செல்போனை ஒட்டுகேட்பதில் தவறில்லை - உச்சநீதிமன்றம்

தனிநபர்களின் உரிமையை பாதிக்காதவரை தேசத்தின் பாதுகாப்புக்காக மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை என பெகாசஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.