K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

என் மனதை மிகவும் ஈர்த்தது... டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ் ஃபேமிலி படத்தை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வெகுவாக பாராட்டியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி, கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

IPL 2025: லக்னோவை வீழ்த்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.

இதை செய்தால் ராகு கேது பெயர்ச்சியை கண்டு பயம் தேவையில்லை!

ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும், கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பலனைத்தருகிறது. பொதுவாக பல்வேறு ராசிக்காரர்களுக்கு நல்லது நடந்தாலும், ஒரு சிலராசிக்காரர்களுக்கு, மோசமான பலன்களை கிரகப்பலன்கள் வழங்குகின்றன. அதிலும், குறிப்பாக, ராகு, கேது பெயர்ச்சி மாற்றங்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மதுரை சித்திரை பெருவிழா: தங்க, வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்!

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று தங்க, வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மணல் குவாரி திறக்க வலியுறுத்தல்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு..!

தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மணல் குவாரிகள் திறக்கப்படும்வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக திருச்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

17 ஆண்டுகளுக்கு பின் காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

மத பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துமீறும் பாகிஸ்தான்.. இந்திய ரானுவம் மீது துப்பாக்கிச்சூடு.. எல்லையில் தொடரும் பதற்றம்!

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய ரானுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

சார்தாம் யாத்திரை தொடக்கம்... பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உலக புகழ்பெற்ற, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதையடுத்து முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று (மே.4) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.