K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

India Pakistan War : இந்தியா, பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட முடியாது - அமெரிக்க துணை அதிபர்

India Pakistan War Update : இந்தியாவில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் விடிய விடிய தாக்குதல்... முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு!

பாகிஸ்தான் தலைநர்கர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து இந்திய ராணுவம் விடிய விடிய தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர்: பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

நீதி வழங்கும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர்- கர்னல் சோபியா குரேஷி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.

"பஹல்காம் தாக்குதலுக்கு TRF அமைப்பே காரணம்" - விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியற்கு TRF அமைப்பே காரணம் என்றும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.

OPERATION SINDOOR- இந்திய ராணுவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணைநிற்பதாக கூறியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

"இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்” விரைவில் முடிவுக்கு வரும் - டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"இந்தியா - பாகிஸ்தான் போர்; உலகம் தாங்காது" - ஐநா சபை பொதுச் செயலாளர் கவலை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது என்று கவலை தெரிவித்துள்ள ஐநா சபை பொதுச் செயலளார் ஆண்டனியோ குட்டர்ஸ், இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

OPERATION SINDOOR - இந்திய ராணுவத்திற்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியற்கு மத்திய அமைச்சர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.