K U M U D A M   N E W S

Author : JANANI janani

#BREAKING : கப்பலூர் சுங்கச்சாவடியில் போலீசார் குவிப்பு

கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக குற்றம்சாட்டி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

தெற்கு ரயில்வே - 67 காலிப் பணியிட அறிவிப்பு..

தெற்கு ரயில்வேவில் 67 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

#BREAKING : கலாம் பிறந்தநாளில் தவெக முதல் மாநாடு?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.15-ம் தேதி நடைபெற உள்ளதாக சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி, கப்பியாம்புலியூர், பனையபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன

#BREAKING : தவெக மாநாட்டிற்கு தடை விதிக்கக்கோரி கடிதம்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தடை விதிக்கக்கோரி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம். தவெக மாநாட்டில் யானை சின்னம் பதித்த கொடியால் நாட்டில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது - ஆர்.டி.ஐ செல்வம்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் ட்விஸ்ட்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் தன்னுடையது என முஸ்தபா என்பவர் உரிமைக்கோரியிருந்தார். முஸ்தபா என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணி நேரமாக பல கோணங்களில் விசாரணை நடத்தினர்

2026 தேர்தல்.. சீமான் Vs விஜய் .. யார் தலைமையில் கூட்டணி ? - சீமான் கட் & ரைட் பதில்

2026 தேர்தல்.. சீமான் Vs விஜய் .. யார் தலைமையில் கூட்டணி ? - சீமான் கட் & ரைட் பதில்

சி.பி.ஐ அலுவலகத்தில் பொன் மாணிக்கவேல்.. வெளிவந்த புதிய தகவல்

சிலை கடத்தல் தொடர்பான சிபிஐ வழக்கு: சி.பி.ஐ அலுவலகத்தில் கையெழுத்திட்ட பொன் மாணிக்கவேல்

"முடியாது.. முடியாது.. விடவே மாட்டேன்.." - நடுரோட்டில் விழுந்து கதறி அழுத பெண்..

சென்னையை அடுத்த புழலில் உள்ள சிவன் ஆலயத்தில் வளர்க்கப்பட்ட மாடுகளை காப்பகத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு. மாடுகளை தனியார் பசுக்கள் காப்பகத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

#JUSTIN || காதல் திருமணம் - காவல் நிலையம் வாசலில் பயங்கர மோதல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம். தாக்குதலில் ஈடுபட்ட இருவீட்டாரைச் சேர்ந்த 17 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு.

#JUSTIN : அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து; 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. அரசுப்பேருந்தும் காரும் மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்