K U M U D A M   N E W S

Author : JANANI janani

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024

JUST IN | 2 சிறுவர்களை கொலை செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே யோகராஜ் என்பவருடைய 2 மகன்கள் கொலை. 2 சிறுவர்களை கொலை செய்ததாக யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர் கைது

”இதனால் திமுகவின் சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும்” - கடம்பூர் ராஜு கடும் தாக்கு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு திமுகவில் உள்ள சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

"உதயநிதிஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி"-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவியை வழங்குவார் - கோவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

''வங்கதேச சிறுபான்மையின இந்துக்கள் மீது இன அழிப்பு நடக்கிறது'' - அர்ஜுன் சம்பத் கடும் குற்றச்சாட்டு

''வங்கதேச சிறுபான்மையின இந்துக்கள் மீது இன அழிப்பு நடக்கிறது'' - அர்ஜுன் சம்பத் கடும் குற்றச்சாட்டு

BREAKING | சென்னையில் கொடூரம்.. துண்டு துண்டாக சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்..

சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய நபர் குறித்து போலீசார் விசாரணை

ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாடல்

ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாடல். வேலை இல்லா திண்டாட்டத்தை மறைக்க முயற்சி என அஜய்குமார்

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#JUSTIN : TNPSC Group - 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - EPS வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு மூலம் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் வெறும் 6,244 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளது . குரூப்-4 தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

#JUSTIN : NLC ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி-யில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் வழங்கக் கோரி 2வது நாளாக போராட்டம். என்எல்சி நிறுவனம் முன்பு அமர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்எல்சி நிர்வாகம் 8.33% மட்டுமே போனஸ் வழங்குகிறது