K U M U D A M   N E W S

Author : JANANI janani

BREAKING | அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்

தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடமான 2-வது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்

மீண்டும் ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு..என்ன சொன்னார் தெரியுமா?

மீண்டும் தமிழக அரசை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அந்த பதிவில், “அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார்.

#BREAKING : மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு

சித்தராமையா மீது வழக்குப்பதிவு.. அமலாக்கத்துறை வைத்த செக்

மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு: ”பவள விழாவுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சுதா?” காவல்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.    

தொடரும் விவாகரத்து சர்ச்சை: “பேச்சுவார்த்தைக்கு தயார்..” ஆர்த்தியின் பதிலடி

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.

இனி மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்.. என்ன காரணம் தெரியுமா?

மதுரை விமான நிலையம் நாளை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரம் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். 

பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகரை கைது செய்ய இடைக்கால தடை!

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

”இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழையாம்” - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கிய உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டில் மாட்டிறச்சி கலக்கப்பட்டது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கியுள்ளனர் நீதிபதிகள்.