.திருடப்பட்ட ஹார்ட் டிஸ்குகளிலும் ஆவணங்களிலும் அரசு ரகசிய தகவல்கள் மற்றும் அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய பதிவுகள் உள்ளன என சந்தேகிக்கப்படுகிறது. இது பாதுகாப்பு அம்சங்கள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த ஹைதராபாத் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, ராஜ்பவனில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நபர் யார்? எப்படி உயர்மட்ட பாதுகாப்பு சூழலில் உள்ள வளாகத்துக்குள் நுழைய முடிந்தது? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றது ஆளுநர் மாளிகை என்பதால், உயர் பாதுகாப்பு வாய்ந்த இடத்திலும் இது போன்று நடைபெறுவது, பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த வழக்கில், இன்னும் அதிகாரப்பூர்வமாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









