கரூர் மாவட்ட காவல்துறையில் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்தாலும் வழக்கின் தன்மையை கருதி சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் பெற முடியாத காரணத்தினால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார்.
13 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சி பி சி ஐ டி அதிகாரிகள் அதிரடியாக கேரளாவில் கைது செய்யப்பட்டார். அடுத்த மாதமே அவரது சகோதரர் சேகரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக இந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்களை அடிப்படையாக வைத்து வருமான வரி புலனாய்வு பிரிவில் இருக்கும் பினாமி தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த நிலமானது அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பினாமி சொத்து இல்லை எனவும் பினாமி பரிவர்த்தனை மூலமாக வாங்கப்பட்டது இல்லை எனவும் நிரூபிக்குமாறு கூறி வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு அந்த நிலம் தொடர்பான உரிமையாளர்கள் பிரகாஷ் மற்றும் ஷோபனா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே மே ஒன்பதாம் தேதி ஆஜராகும் படி தெரிவித்திருந்த நிலையில் தற்போது மே 23ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞரோ அல்லது அது தொடர்பான பொறுப்புடைய நபர்களையோ வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராகும் படி வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
LIVE 24 X 7









