இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் தொடர்பு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சோதனை மேற்கொண்டது. மேலும், அவரை விசாகப்பட்டினம் அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. சோதனை
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இளங்கடை மாலித்தனர் நகரைச் சேர்ந்தவர் ரஷீத் அகமது (62). சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வரும் இவருக்கு, உசைன் என்ற மகன் உள்ளார். உசைனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
சென்னை என்.ஐ.ஏ. டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர், சுமார் மூன்று மணி நேரம் இந்த சோதனையை மேற்கொண்டனர். சோதனை நிறைவடைந்த பிறகு, வரும் 23 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உசைனுக்கு அதிகாரிகள் சம்மன் அளித்துவிட்டுச் சென்றனர்.
சமூக வலைதளத்தில் ஆதரவு
இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பின்னர் உசைனின் தந்தையான ரஷீத் அகமதுவிடம் போலீசார் விசாரித்தபோது, அவரது மகன் உசைன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முகநூல் பக்கத்தில் "சூப்பர்", "அருமையாக உள்ளது" என்பது போன்ற ஆதரவான கருத்துகளைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகவே விசாரணை நடத்த அதிகாரிகள் வந்ததாகவும், மேலும் விசாரணைக்காக விசாகப்பட்டினம் வரச் சொல்லியிருப்பதாகவும் கூறினார். இதனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த சம்மனும் உறுதிப்படுத்தியது. இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்.ஐ.ஏ. சோதனை
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இளங்கடை மாலித்தனர் நகரைச் சேர்ந்தவர் ரஷீத் அகமது (62). சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வரும் இவருக்கு, உசைன் என்ற மகன் உள்ளார். உசைனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
சென்னை என்.ஐ.ஏ. டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர், சுமார் மூன்று மணி நேரம் இந்த சோதனையை மேற்கொண்டனர். சோதனை நிறைவடைந்த பிறகு, வரும் 23 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உசைனுக்கு அதிகாரிகள் சம்மன் அளித்துவிட்டுச் சென்றனர்.
சமூக வலைதளத்தில் ஆதரவு
இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பின்னர் உசைனின் தந்தையான ரஷீத் அகமதுவிடம் போலீசார் விசாரித்தபோது, அவரது மகன் உசைன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முகநூல் பக்கத்தில் "சூப்பர்", "அருமையாக உள்ளது" என்பது போன்ற ஆதரவான கருத்துகளைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகவே விசாரணை நடத்த அதிகாரிகள் வந்ததாகவும், மேலும் விசாரணைக்காக விசாகப்பட்டினம் வரச் சொல்லியிருப்பதாகவும் கூறினார். இதனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த சம்மனும் உறுதிப்படுத்தியது. இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









