இந்திய வீரர் ஒருவர் 90மீ தாண்டுவது இதுவே முதல் முறை என்பதால், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன. நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் உலக தடகள வீரர்களும் நீரஜின் சாதனைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
டயமண்ட் லீக் தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்துள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் டயமண்ட் லீக் தடகள போட்டியின் 18வது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90 புள்ளி 23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் 91 புள்ளி 06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்த நிலையில் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ராவின் இடைவிடாத அர்ப்பணிப்பால் தேசம் பெருமை கொள்வதாக தெரிவித்தார். நீரஜ் சோப்ராவின் சாதனை ஒரு குறிப்பிடத்தக்க தனிப்பட்ட மைல்கல்லைக் குறிப்பது மட்டுமல்லாமல், உலகின் உயரடுக்கு ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை வலுப்படுத்துகிறது.
மேலும் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், தோஹா டயமண்ட் லீக் 2025 தொடரில் நீரஜ் சோப்ரா 90 மீ தூரம் ஈட்டி எறிந்தற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
LIVE 24 X 7









