தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசைக் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட தமிழகப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு, உரிய அனுமதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாதவையாக இருப்பதாகக் கூறி, கர்நாடகப் போக்குவரத்து துறை அதிகாரிகள் 60 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும், 'ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்' விதிகளின்படி சாலை வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்தது. இதனால், ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் தொடருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடந்த 9 ஆம் தேதி இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமுக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட தமிழகப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு, உரிய அனுமதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாதவையாக இருப்பதாகக் கூறி, கர்நாடகப் போக்குவரத்து துறை அதிகாரிகள் 60 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும், 'ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்' விதிகளின்படி சாலை வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்தது. இதனால், ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் தொடருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடந்த 9 ஆம் தேதி இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமுக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
LIVE 24 X 7









