கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக தலைவர் விஜய்யிடமே விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, ஜனவரி மாதத்தில் விசாரணை நடைபெறும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் தவெக நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இவர்கள் அனைவரும் நேற்று ஆஜராகினர். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை சுமார் 9 மணி நேரம் நீடித்து இரவு 7.30 மணி அளவில் நிறைவடைந்தது.
அப்போது, பிரசாரக் கூட்ட ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த செயல்படுத்திய திட்டங்கள் குறித்த ஆவணங்களை தவெக நிர்வாகிகள் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த ஆவணங்கள் அனைத்தும் எழுத்து மற்றும் வீடியோ வடிவில் பதிவு செய்யப்பட்டன.
இன்றும் தொடரும் விசாரணை
மேலும், இன்று இரண்டாவது நாளாகவும் சிபிஐ விசாரணை தொடர்கிறது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இன்றும் டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம், நீண்ட நேரம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு விரைவில் சம்மன்
தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாகத் தவெக தலைவர் விஜய்யிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விஜய்யிடம் விசாரணை நடத்துவது தொடர்பாகச் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, ஜனவரி மாதத்தில் விஜய்யிடம் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் தவெக நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இவர்கள் அனைவரும் நேற்று ஆஜராகினர். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை சுமார் 9 மணி நேரம் நீடித்து இரவு 7.30 மணி அளவில் நிறைவடைந்தது.
அப்போது, பிரசாரக் கூட்ட ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த செயல்படுத்திய திட்டங்கள் குறித்த ஆவணங்களை தவெக நிர்வாகிகள் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த ஆவணங்கள் அனைத்தும் எழுத்து மற்றும் வீடியோ வடிவில் பதிவு செய்யப்பட்டன.
இன்றும் தொடரும் விசாரணை
மேலும், இன்று இரண்டாவது நாளாகவும் சிபிஐ விசாரணை தொடர்கிறது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இன்றும் டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம், நீண்ட நேரம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு விரைவில் சம்மன்
தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாகத் தவெக தலைவர் விஜய்யிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விஜய்யிடம் விசாரணை நடத்துவது தொடர்பாகச் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, ஜனவரி மாதத்தில் விஜய்யிடம் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LIVE 24 X 7









