கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
கட்சிப் பதவிகள் நீக்கமும் ஜெயலலிதாவின் செயல்பாடும்
செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும், பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் நான் பேட்டியளித்தேன். இதன்மூலம் மட்டுமே எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க முடியும். இதை பேசியதற்காக எனது கட்சிப் பதவிகளைப் பறித்துக் கொண்டார்கள். கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். ஆனால் ஜெயலலிதா இருந்த போது 2009ஆம் ஆண்டு இன்றைய பொதுச் செயலாளரை (எடப்பாடி பழனிசாமி ) அனைத்துப் பணிகளில் இருந்து விலக்கினார்கள். 2012-இல் என்னையும் கடசி பொறுப்புகளில் இருந்து நீக்கினார்கள். ஆனால் அதன்பிறகு எங்களை அரவணைத்துச் சென்ற வரலாறு இருக்கிறது. தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அ.தி.மு.க.வில் இருந்து ஜெயலலிதா நீக்கவில்லை. ஆனால், இன்று என்னை சுற்றியுள்ளவர்களைக் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் இபிஎஸ்
ஜெயலலிதா ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தவில்லை. அவரை 2009-ஆம் ஆண்டு பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. நாங்கள் முன்மொழியாவிட்டால் பழனிசாமி முதல்வர் ஆகி இருக்க முடியாது. ஜெயலலிதா இருக்கும் போதும், அதன்பிறகும் மூன்று முறை ஓ. பன்னீர்செல்வதை மட்டும்தான் முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார். இவரை ஏன் அமர வைக்கவில்லை என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். ஏனெனில் இவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.
எங்களைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், இவர் முதல்வரே ஆகியிருக்க முடியாது. எனவே கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. அவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எனச் சொல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. பழைய விஷயங்களை கிளற ஆரம்பித்தால் நிறைய இருக்கின்றன. ஆனால் அவ்வாறு விமர்சிப்பவன் நான் அல்ல.
பா.ஜ.க.வுடனான உறவும் குடும்ப ஆட்சியும்
என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் எனக் கூறியதே பா.ஜ.க.தான். தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் அவர் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. ஆனால் அவரையே கொச்சையாகப் பேசினார். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்குப் பின்னால் தான் அமர்ந்திருந்தேன். ஒருமுறை கூட 'என்ன குறை' என்று அவர் கேட்டதில்லை.
கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டுப் பணக்காரர்களுக்குச் சீட் வழங்கியவர் எடப்பாடி. அ.தி.மு.க.வைப் பாதுகாத்த பா.ஜ.க.வை 2024 தேர்தலின்போது கழட்டி விட்டார். அ.தி.மு.க.வில் குடும்ப ஆட்சி நடக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமியின் மகன், மருமகன், மைத்துனர் தான் அ.தி.மு.க.வை நடத்துகின்றனர்" என்று தெரிவித்தார்.
கட்சிப் பதவிகள் நீக்கமும் ஜெயலலிதாவின் செயல்பாடும்
செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும், பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் நான் பேட்டியளித்தேன். இதன்மூலம் மட்டுமே எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க முடியும். இதை பேசியதற்காக எனது கட்சிப் பதவிகளைப் பறித்துக் கொண்டார்கள். கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். ஆனால் ஜெயலலிதா இருந்த போது 2009ஆம் ஆண்டு இன்றைய பொதுச் செயலாளரை (எடப்பாடி பழனிசாமி ) அனைத்துப் பணிகளில் இருந்து விலக்கினார்கள். 2012-இல் என்னையும் கடசி பொறுப்புகளில் இருந்து நீக்கினார்கள். ஆனால் அதன்பிறகு எங்களை அரவணைத்துச் சென்ற வரலாறு இருக்கிறது. தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அ.தி.மு.க.வில் இருந்து ஜெயலலிதா நீக்கவில்லை. ஆனால், இன்று என்னை சுற்றியுள்ளவர்களைக் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் இபிஎஸ்
ஜெயலலிதா ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தவில்லை. அவரை 2009-ஆம் ஆண்டு பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. நாங்கள் முன்மொழியாவிட்டால் பழனிசாமி முதல்வர் ஆகி இருக்க முடியாது. ஜெயலலிதா இருக்கும் போதும், அதன்பிறகும் மூன்று முறை ஓ. பன்னீர்செல்வதை மட்டும்தான் முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார். இவரை ஏன் அமர வைக்கவில்லை என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். ஏனெனில் இவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.
எங்களைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், இவர் முதல்வரே ஆகியிருக்க முடியாது. எனவே கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. அவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எனச் சொல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. பழைய விஷயங்களை கிளற ஆரம்பித்தால் நிறைய இருக்கின்றன. ஆனால் அவ்வாறு விமர்சிப்பவன் நான் அல்ல.
பா.ஜ.க.வுடனான உறவும் குடும்ப ஆட்சியும்
என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் எனக் கூறியதே பா.ஜ.க.தான். தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் அவர் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. ஆனால் அவரையே கொச்சையாகப் பேசினார். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்குப் பின்னால் தான் அமர்ந்திருந்தேன். ஒருமுறை கூட 'என்ன குறை' என்று அவர் கேட்டதில்லை.
கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டுப் பணக்காரர்களுக்குச் சீட் வழங்கியவர் எடப்பாடி. அ.தி.மு.க.வைப் பாதுகாத்த பா.ஜ.க.வை 2024 தேர்தலின்போது கழட்டி விட்டார். அ.தி.மு.க.வில் குடும்ப ஆட்சி நடக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமியின் மகன், மருமகன், மைத்துனர் தான் அ.தி.மு.க.வை நடத்துகின்றனர்" என்று தெரிவித்தார்.
LIVE 24 X 7









