2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான சிறப்புக் குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அறிக்கை தயாரிப்புக் குழுவின் நோக்கம்
கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ள இந்தக் குழுவின் செயல்பாடு குறித்து விளக்கமளித்துள்ளார்.
இஇதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு. தமிழகம் முழுவதும் பொதுமக்கள். சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது. இவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்படும்.
தேர்தல் அறிக்கை குழுவில் உள்ளவர்கள்
இந்தச் சிறப்புக் குழுவில் பின்வரும் நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்: கே.ஜி. அருண்ராஜ், ஜேசிடி பிரபாகர், ஏ. ராஜ்மோகன், டிஎஸ்கே மயூரி, ஏ. சம்பத்குமார், எம். அருள் பிரகாசம், ஆர். பரணிபாலாஜி, ஜே. முகமது பர்வேஸ், டிகே. பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, மற்றும் எம். சத்யகுமார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்குக் கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை தயாரிப்புக் குழுவின் நோக்கம்
கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ள இந்தக் குழுவின் செயல்பாடு குறித்து விளக்கமளித்துள்ளார்.
இஇதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு. தமிழகம் முழுவதும் பொதுமக்கள். சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுநர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது. இவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்படும்.
தேர்தல் அறிக்கை குழுவில் உள்ளவர்கள்
இந்தச் சிறப்புக் குழுவில் பின்வரும் நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்: கே.ஜி. அருண்ராஜ், ஜேசிடி பிரபாகர், ஏ. ராஜ்மோகன், டிஎஸ்கே மயூரி, ஏ. சம்பத்குமார், எம். அருள் பிரகாசம், ஆர். பரணிபாலாஜி, ஜே. முகமது பர்வேஸ், டிகே. பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, மற்றும் எம். சத்யகுமார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்குக் கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
LIVE 24 X 7









