சம்பவம் நடந்தது எப்படி?
டெல்லியில், யமுனை ஆற்றின் தூய்மைக்கேடு நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் அரசியல் பிரச்சினையாக உள்ளது. இந்தச் சூழலில், டெல்லி பட்பர்கஞ் தொகுதி பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி, யமுனை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, அவர் ஆற்றங்கரையில் இரண்டு கைகளிலும் தண்ணீர் பாட்டில்களுடன் நின்றுபடி ஒரு 'ரீல்' வீடியோ எடுக்க முயற்சி செய்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தார். சுற்றியிருந்த அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை மீட்க முயற்சிக்கும் முன்னர், அவர் முழுவதும் ஆற்றுக்குள் விழுந்தார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏவின் கிண்டல் பதிவு
பாஜக எம்எல்ஏ ஆற்றில் விழுந்த இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. இதனைக் கவனித்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, அந்த வீடியோவைத் தனது 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கிண்டலாகப் பதிவிட்டார்.
"பொய், புரட்டு அரசியலால் அதிருப்தியடைந்த யமுனைத் தாய், பாஜக எம்எல்ஏவை தன்னுள் இழுத்துக் கொண்டாள் போல!" என்று அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
சத் பூஜை மற்றும் அரசியல் விமர்சனம்
டெல்லியில் இன்றுடன் சத் பூஜை நிறைவு பெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள் யமுனை ஆற்றங்கரையில்தான் நடைபெறும். யமுனை ஆற்றின் தூய்மைக்கேட்டை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் நிலையில், விழிப்புணர்வுக்காக 'ரீல்' எடுக்க முயன்ற பாஜக எம்எல்ஏவின் இந்தச் செயல் தற்போது கடுமையான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது.
यह हैं भाजपा के विधायक रविंदर नेगी जी —
— Sanjeev Jha (@Sanjeev_aap) October 26, 2025
जिन्होंने झूठ की पराकाष्ठा को भी पार कर दिया है।
जुमलेबाज़ी अब इनका पेशा बन चुका है।
शायद इसी झूठ और दिखावे की राजनीति से तंग आकर यमुना मैया ने खुद इन्हें अपने पास बुला लिया।@Saurabh_MLAgk pic.twitter.com/dwTZcW4QWe
LIVE 24 X 7









