இந்தியா

பொதுமக்கள் கவனத்திற்கு.. இன்றே கடைசி நாள்; தவறவிடாதீர்!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (டிச.31) கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு.. இன்றே கடைசி நாள்; தவறவிடாதீர்!
Today is the last day
பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக, பான் (PAN) எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (டிசம்பர் 31) கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இன்றுடன் காலக்கெடு முடிவடைவதால், இணைக்காதவர்கள் தாமதக் கட்டணத்துடன் இன்றைக்குள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைசி வாய்ப்பு; அபராதம் மற்றும் விளைவுகள்

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, இதுவே கடைசி வாய்ப்பு என்றும், இன்றைக்குள் இணைக்கத் தவறினால், பான் எண் செல்லாது (Inoperative) என்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் எண் செல்லாதது ஆக்கப்பட்டால், வருமான வரி செலுத்துதல், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட நிதிச் செயல்பாடுகள் தடைபடும். மேலும், அதிகப்படியான TDS/TCS பிடித்தம், 15G மற்றும் 15H படிவங்கள் நிராகரிப்பு, வங்கிச் சேவைகள் நிறுத்தம் போன்ற சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

தற்போது வரை இணைக்காதவர்கள், ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இன்றைக்குள் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும்.

இணைப்பு நடைமுறை மற்றும் விதிவிலக்குகள்

பான் எண் செல்லாதது ஆக்கப்பட்டாலும், காலதாமதத்திற்கான கட்டணம் செலுத்திப் பான் எண்ணை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்.

இணைப்பு நடைமுறை: ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க விரும்பும் மக்கள், வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கே, 'Quick Links'-ல் உள்ள 'Link Aadhaar Card' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். திறக்கும் பக்கத்தில் பான் மற்றும் ஆதார் எண்ணைப் பதிவிட்டு 'Validate' கொடுக்க வேண்டும். பான் ஏற்கனவே இணைந்திருந்தால் 'Already Linked' என்று காட்டும். இல்லையெனில், அதில் கேட்கும் விவரங்களை அளித்து ரூ.1,000 அபராதத்துடன் இணைக்க முடியும்.

எனினும், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு பான் அட்டை வாங்கியவர்கள், இன்று வரை எவ்வித அபராதமும் இன்றிப் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.