நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடக்கும் பட்சத்தில் இந்த இரண்டு ஜாம்பவான்களும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக நடிக்கும் படமாக இது இருக்கும். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதைக்களம் மற்றும் தயாரிப்பு
சமீபத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக 'கைதி - 2' திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 'கூலி' வெளியீட்டுக்கு முன்பே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் சந்தித்த லோகேஷ் கனகராஜ், ஒரு கதையைச் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மூத்த கேங்ஸ்டர்கள் குறித்த அந்தக் கதை, இருவருக்கும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘கைதி - 2’ திரைப்படத்திற்கு முன்பே இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி
திரைப்பட உலகில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். ‘அபூர்வ ராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘பதினாறு வயதினிலே’ மற்றும் ‘நினைத்தாலே இனிக்கும்’ ஆகியவை அதில் அடங்கும். அவர்கள் கடைசியாக 1979-ல் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த வகையில், 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புதிய கூட்டணி மீண்டும் திரையில் இணைவது திரையுலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கதைக்களம் மற்றும் தயாரிப்பு
சமீபத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக 'கைதி - 2' திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 'கூலி' வெளியீட்டுக்கு முன்பே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் சந்தித்த லோகேஷ் கனகராஜ், ஒரு கதையைச் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மூத்த கேங்ஸ்டர்கள் குறித்த அந்தக் கதை, இருவருக்கும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘கைதி - 2’ திரைப்படத்திற்கு முன்பே இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி
திரைப்பட உலகில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். ‘அபூர்வ ராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘பதினாறு வயதினிலே’ மற்றும் ‘நினைத்தாலே இனிக்கும்’ ஆகியவை அதில் அடங்கும். அவர்கள் கடைசியாக 1979-ல் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த வகையில், 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புதிய கூட்டணி மீண்டும் திரையில் இணைவது திரையுலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
LIVE 24 X 7









